Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் தை மாதம் 27ம் (09-02-2017) திகதி  வியாழக்கிழமையன்று தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் மூலமூர்த்திக்கு விஷேட ஸ்நபனாபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெற்று தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக காட்சியளிக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சோடசோபசாரங்களுடன் விஷேட தூப, தீபாராதனைகள் அடங்கலாக விஷேட பூஜை இடம்பெற்று எம்பெருமான் அழகிய மயில்வாகனத்தில் ஆரோகணித்து உள்வீதி உலாவரும் உற்சவம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியளவில் ஆலய மண்டபத்தில் “புதிர் வழங்கல்“ நிகழ்வு ஆரம்பமாகும் என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அடியார்கள் அனைவரும் வருகைதந்து மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொண்டு எம்பெருமானைத் தரிசித்து திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உற்சவ உபயகாரர் – திரு. சி.கதிரேசு குடும்பத்தினர் – வல்வெட்டித்துறை


குறிப்பு
தைப்பூச உற்சவ உபயகாரர் குடும்பத்தினர் முருகையாவுக்கு ஆட்டுக்கடா வாகனம் ஒன்று செய்வதற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு