Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 11-12-2021 சனிக்கிழமை ஆரம்பமாகி 20-12-2021 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
விரத ஆரம்ப தினமான 11-12-2021 சனிக்கிழமை முதல் தினமும் அதிகாலை 4.30 மணியளவில் மூலமூர்த்திக்கு உருத்திராபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்.
தொடர்ந்து திருவெம்பாவை பாடல்கள் பாராயண நிகழ்வுடன் பூஜை நிறைவுபெறும்.
உபயகாரர்கள் விபரம்
01. பொ.நாகமுத்து குடும்பம்
02. வே.மயில்வாகனம் குடும்பம்
03. ஏ.கணேசபிள்ளை குடும்பம்
04. அ.கண்ணையா குடும்பம்
05. ந.செல்வராசா குடும்பத்தினர்
06. க.சிவபாதசுந்தரம் குடும்பம்– பொ.பழனியாண்டி குடும்பம்
07. ந.சபாரத்தினம் குடும்பம்
08. கு.நாகதம்பி குடும்பம்
09. கி.குணசீலன் குடும்பம்
10. க.சிவப்பிரகாசம் குடும்பம்
எனவே உபயகாரர்கள் அனைவரும் தவறாது அதிகாலை வேளையில் வருகை தந்து தங்களது உபயங்களில் கலந்து கொண்டு தரிசித்து எம்பெருமானது நல்லருளையும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பூஜைக்குரிய கட்டணம் – 7,000 ரூபா
முக்கிய குறிப்பு.
அடியார்கள் அனைவரும் தவறாது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்