Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் சம்பந்தமாக நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்,
எதிர்வரும் 13-03-2020 வெள்ளிக்கிழமையன்று காலை 09.30 மணியளவில் அருள்மிகு முருகையா தேவஸ்தான வளாகத்தில் ஆலய மகோற்சவம் சம்பந்தமான விஷேட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேற்படி விஷேட கூட்டத்தில் எம்பெருமான் அடியார்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்